தஞ்சாவூர், ஜூன் 19 - ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் தேசிய அளவிலான ஜூனியர் ஓட்டப்பந்தயம் நடை பெற்றது. இதில், தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம், வெண்டையம்பட்டி ஊராட்சி, நவலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஸ்வேதா தங்கப்பதக்கம் வென்றார்.
மாணவி ஸ்வேதா திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் ஜம்மு - காஷ்மீரில் கடந்த ஜூன் 11, 12, 13-ஆம் தேதிக ளில் நடைபெற்ற தேசிய அளவிலான, ஜூனியர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இதன் மூலம் இவர், நேபாளத்தில் விரைவில் நடைபெற உள்ள சர்வதேச போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள் ளார்.
பதக்கம் வென்று செவ்வாய்க்கிழ மையன்று சொந்த ஊருக்கு வந்த மாணவி ஸ்வேதாவை, சிபிஎம் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் மற்றும் ஊர் பொதுமக்கள் சால்வை, மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.
மாணவி ஸ்வேதா, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் கிளைச் செயலா ளர் ப.ஜெய்சங்கரின் மகள் ஆவார்.