தஞ்சாவூர், நவ.1- சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், தேசிய அளவிலான சிலம்பப் போட்டி அண்மையில் நடை பெற்றது. இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச் சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண் டனர். இப்போட்டியில் தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா, கர் நாடகா, பஞ்சாப், உத்தரப்பிர தேசம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற் பட்ட வீரர்கள் பங்கேற்றனர். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாய் தமிழர் பாரம்பரிய சிலம்ப கழகம் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் பங்கேற்ற னர். இதில், 6 பேர் தங்கப் பதக்கம், 9 பேர் வெள்ளிப் பதக்கம், 10 பேர் வெண்கலப் பதக்கம் பெற்றனர். மேலும், பேராவூரணி அணியினர் ஒட்டுமொத்த சாம்பியன் பட் டமும் வென்றனர். இவர்கள் பயிற்சியாளர் சென்சி கே. பாண்டியன், துணை பயிற்சி யாளர் ஆர்.அரவிந்த் தலை மையில் இந்த போட்டியில் பங்கேற்றனர். பேராவூரணி பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் பங்கேற்றது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.