districts

img

நாகரசம்பேட்டை பழமையான பள்ளி கட்டிடம் அப்புறப்படுத்தப்படுமா?

கும்பகோணம்,  செப்.8 - தஞ்சாவூர் மாவட்டம் திரு விடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாகரசம்பேட்டை ஊராட்சி யில் ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளி எந்த நேரத் திலும் இடிந்து விழும் நிலை யில் உள்ளது. சேதமடைந்த பள்ளிக் கட்டிடத்தை அப்புறப் படுத்தி பள்ளி குழந்தை களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென அர சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம் திரு விடைமருதூர் தெற்கு ஒன்றி யம் நாகரசம்பேட்டை கிளை  செயலாளர் நா.சத்தியராஜ் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் குறிப்பிட் டுள்ளதாவது: திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 75 நாகரசம்பேட்டை ஊராட்சியில் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி செயல் பட்டு வருகிறது. ஒன்றாம்  வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 30 குழந்தை கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்திற்குள் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடம் உள்ளது. இது எந்நேரத்திலும் இடிந்து  விழும் நிலையில் இருக் கிறது. மேலும், அந்த கட்டி டத்தின் உள்ளேயும், வெளி யேயும் குழந்தைகள் அவ்வப் போது விளையாடி வரு கின்றனர். எப்போது வேண்டு மானாலும் குழந்தைகளின் மீது இடிந்து விழும் ஆபத்து  உள்ளது.  குழந்தைகளின் உயி ருக்கு ஆபத்தை ஏற்படுத் தக் காத்திருக்கும் இந்த கட்டி டத்தை இடித்து அப்புறப் படுத்திவிட்டு, புதிய தரமான கட்டிடம் வேண்டுமென பல முறை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த  நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே அரசும் மாவட்ட நிர்வாகமும் உடன டியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு உரிய தீர்வை எட்டிட வேண்டும். தீர்வு ஏற்ப டாத பட்சத்தில் மக்களை திரட்டி நூதன போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்

;