districts

img

‘குடும்ப வன்முறை தடுப்போம்; சமத்துவம் காப்போம்’ சிபிஎம் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வழங்கல்

தஞ்சாவூர், ஆக.6 -  தஞ்சாவூர் பழைய பேருந்து நிலை யத்தில், சனிக்கிழமை “குடும்ப வன்முறை எதிர்ப்பு இயக்கம்” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  நடைபெற்றது.  இதையொட்டி பொது மக்கள், வியாபாரிகளுக்கு துண்ட றிக்கை வழங்கும் நிகழ்ச்சிக்கு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டி யன் தலைமை வகித்தார். மாவட்டச்  செயற்குழு உறுப்பினர் பி.செந்தில் குமார், மாவட்டக் குழு உறுப்பினர்கள் இ.வசந்தி, என்.சரவணன், மாநகரச் செயலாளர் வடிவேலன், மாநகரக் குழு  உறுப்பினர்கள் கரிகாலன், சி.ராஜன், கோஸ்கனி, பழைய பேருந்து நிலைய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  அரியலூர் சிபிஎம் சார்பில் புதுச்சாவடி பகுதி களில் ஒன்றியச் செயலாளர் வெங்கடா சலம் தலைமையில் குடும்ப வன் முறைக்கு எதிரான பிரச்சார இயக்க துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. துண்டு  பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சியை கட்சி யின் மாவட்டச் செயலாளர் இளங்கோ வன் துவக்கி வைத்தார். இதில் மீனா,  மணியம்மாள், மீனாட்சி, இதயத்துல்லா,  ரவி, ரவீந்திரன், மைதீன்ஷா ஆகி யோர் கலந்து கொண்டனர்.

;