districts

img

தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பு

பாபநாசம், நவ.26- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதி தெருக்க ளில் ஏராளமான நாய்கள் சாலைகளில் சுற்றித் திரி கின்றன. மேலும் நாய்கள்  சண்டையிட்டுக் கொள்வ தால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.  பாபநாசம் மட்டுமல்ல, இதைச் சுற்றி யுள்ள இராஜகிரி, பண்டாரவாடை, கபிஸ்த லம் உள்ளிட்ட பல கிராமப் பகுதிகளிலும் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் நாய்க ளால் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகை யில், ‘‘பாபநாசத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. எனவே, தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.