districts

கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், அக். 19 -  பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தஞ்சா வூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டாட்சியர் அலு வலகம் எதிரே கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநிலக்  குழு உறுப்பினர் வி.துரைராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் டி.மோகன்தாஸ், விவசாயிகள் சங்கம் ஒன்றியத் தலைவர் சி. மெய்க்காப்பன், தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர் சங்கம் ஒரத்தநாடு ஒன்றியம் தங்க.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி. செந்தில்குமார் கோரிக்கையை விளக்கிப் பேசினார்.  இதில், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கோவிந்தராஜ், வி.தொ.ச ஒன்றியச் செயலாளர் கு.பாஸ்கர் மற்றும் ஒன்றியக் குழு, வாலிபர் சங்க மாவட்டக் குழு, விவசாயி கள் சங்க உறுப்பினர்கள், பால் உற்பத்தி யாளர்கள் சங்கம் மண்டலக்கோட்டை கிளைச் செயலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.42, எரு மைப்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.51 என உயர்த்தி வழங்க வேண்டும். தஞ்சை ஆவின்  ஒன்றியத்தில் 2020-21 ஆம் ஆண்டுக்கான தணிக்கையின்படி, ஆவின் லாபத்தில், லிட்டர் ஒன்றுக்கு ரூ.1.25 ஊக்கத் தொகை யினை கறவையாளர்களுக்கு வழங்க அரசு உத்தரவு பிறப்பித்த பின்பும் அதை வழங்கா மல், பங்கு எனக் கூறி 70 விழுக்காடு தொகையை ஆவின் பிடித்தம் செய்துள்ளது.  எனவே, முழுத் தொகையையும் கறவையா ளர்களுக்கு திருப்பி வழங்க வேண்டும்.  பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். மண்டலக் கோட்டை பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மூலம், வங்கியில் கறவை மாடு கடன் பெற்று  தந்து, கடன் தொகையை பெற்றுக் கொண்டு,  வங்கியில் செலுத்தாமல் மோசடி செய்து,  மீண்டும் கறவையாளர்களை தொந்தரவு செய்வதை கைவிட்டு, கடனை முழுமை யாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலி யுறுத்தி ஒரத்தநாடு வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

;