districts

திருபுவனத்தில் புதிய நூலகம்  அமைக்க தமுஎகச கோரிக்கை

கும்பகோணம், மே 11- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின்  திருவிடைமருதூர் 15 ஆவது கிளை மாநாடு திருவிடை மருதூர் பி.ஆர் நினைவகத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு கிளைத் தலைவர் இலக்கிய தோழன் தலைமை வகித்தார்.  தஞ்சை மாவட்ட செயலாளர் விஜயகுமார் சிறப்புரையாற்றி னார். மாவட்ட தலைவர் சா.ஜீவபாரதி, கவிஞர் கவிமுனி கவிதை வாசித்தனர். மாவட்ட குழு உறுப்பினர் மேலை நீல மேகம் ஓரங்க நாடகத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். திருபுவனத்தில் பொதுமக்கள் பயன்படுத்த பொது நூலகம்  அமைத்து தர நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டுள் ளது. இதில் நடவடிக்கை எடுத்து நூலகம் அமைக்க வேண்டும்.  தமிழ் மொழியை பாதுகாப்பதற்கும் மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய கிளைத் தலைவராக இலக்கிய தோழன், துணைத்  தலைவர்களாக மகாலிங்கம், ராமு, சொக்கலிங்கம், செயலாளராக  முகவை கவிமுனி, இணை செயலாளர்களாக லெனின், பன்னீர் செல்வம், ரசீத்தரன், பொருளாளராக ஜவகர்லால், நிர்வாக  குழு உறுப்பினர்களாக மேலை நீலமேகம், ஆர்.சேகர், அம்ச வள்ளி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.