தஞ்சாவூர், ஜன.20- தஞ்சாவூர் அருகே மேல உளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாட்டில், அரசுப் பள்ளியில் முதல் முறையாக வானிலை ஆய்வகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.இதில், அதிக திறன் கொண்ட தொலைநோக்கிக் கருவி, ஆக்மண்டட் ரியாலிட்டி, விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட், ஸ்மார்ட் டிவி, வானிலை தொடர்பான சுமார் 28க்கும் மேற்பட்ட பொருட்கள், சூரிய மண்டல அமைப்பு, விண்மீன்களின் சுழற்சி, விண்வெளியில் சாதித்த விஞ்ஞானிகளின் வரலாறு, விண்வெளி சார்ந்த புத்தங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். விழாவில், ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் கலந்து கொண்டனர்.