districts

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவச் சான்று சிறப்பு முகாம்

தஞ்சாவூர், ஜன.19-  தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் பள்ளியில் படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு மருத்துவச் சான்று வழங்குவதற்கு, வட்டார வாரியாக சிறப்பு மருத்துவ முகாம் 15 நாட்கள் நடைபெற உள்ளது.  முகாமில் அரசு மற்றும் தனியார் பள்ளியில் படிக்கும் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத் திறனாளிகள் மட்டும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.  ஒரத்தநாடு வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு ஜனவரி 21-ஆம் தேதி கும்பகோணம் கே.எம். எஸ்.எஸ் வளாகத்தில் இந்த முகாம் நடைபெறு கிறது. கும்பகோணம் வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு ஜனவரி 24-ஆம் தேதி புனித தூய நடுநிலைப் பள்ளியிலும், சேதுபாவாசத்திரம் வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு ஜனவரி 28-ஆம் தேதி பள்ளத் தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், தஞ்சாவூர் ஊரகத்தை சேர்ந்தவர்களுக்கு ஜன வரி 31-ஆம் தேதி வல்லம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், திருவிடைமருதூர் வட்டா ரத்தை சேர்ந்தவர்களுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி திருவாவடுதுறை அம்பலவாண தேசிகர் நடுநிலைப் பள்ளியிலும் நடைபெறுகிறது.  திருவையாறு வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு பிப்ரவரி 3-ஆம் தேதி திருவையாறு சீனிவாசராகவ மேல்நிலைப் பள்ளியிலும், திருப்பனந்தாளை சேர்ந்தவர்களுக்கு பிப்ரவரி 4- ஆம் தேதி எஸ்.கே.ஜி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும், பூதலூரை சேர்ந்தவர்களுக்கு பிப்ரவரி 8- ஆம் தேதி திருக்காட்டுப்பள்ளி சிவசாமி ஐயர் உயர்நிலைப் பள்ளியிலும், பேராவூரணியை சேர்ந்தவர்களுக்கு பிப்ரவரி 10-ஆம் தேதி பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறுகிறது.  

பட்டுக்கோட்டை வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டியன் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பிப்ரவரி 11-ஆம் தேதியும், அம்மாபேட்டையை சேர்ந்தவர்களுக்கு பிப்ரவரி 14-ஆம் தேதி ரெஜினா சேலி மேல்நிலைப் பள்ளியிலும், திருவோணம் வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு பிப்ரவரி 16-ஆம் தேதி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், மதுக்கூரை சேர்ந்தவர்களுக்கு பிப்ரவரி 17-ஆம் தேதி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், பாபநாசம் வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு பிப்ரவரி 18-ஆம் தேதி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறுகிறது.  சிறப்பு முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுதிற னாளிகள் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு  புகைப்படம் -5, இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவ ணங்களுடன் வந்து கலந்து கொள்ள வேண்டும்.  தஞ்சை மாவட்டத்தில் இதுநாள் வரை மாற்றுத்  திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகள் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும், தனித்துவம் வாய்ந்த அடை யாள அட்டை பெறாதவர்கள் மாற்றுத் திறனாளி களுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை  நகல் மற்றும் புகைப்படம் -2 ஆகிய ஆவணங்களு டன் நேரில் வந்து கலந்து கொள்ளலாம் என தஞ்சா வூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.