கும்பகோணம், ஜூலை 30 - கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் உள்ள தற்காலிக மீன் விற்பனை கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரில் பல்வேறு தெருக்களில் வெளியூர் மீன் வியாபாரிகள் சாலையோரம் கடை கள் அமைத்து விற்பனையில் ஈடுபட்டு வரு கின்றனர். மேலும் அந்த இடத்திலேயே சுத்தம் செய்தும் வருகின்றனர். இதனால் அந்த பகுதி யில் துர்நாற்றம் வீசுவதோடு, கழிவுகளை அப்புறப்படுத்தாமல் விட்டு விடுவதால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் அபா யம் நிலவுவதாக பொதுமக்கள் மாநக ராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார் தெரி வித்து வந்தனர். புகாரைத் தொடர்ந்து, மாநகராட்சி நிர்வா கம் சார்பில் மாநகர் நல அலுவலர் பிரேமா, மாநகராட்சி பகுதியில் சாலையோரம் மீன் விற்பனையில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் தாங்களாக முன்வந்து கடைகளை அப்புறப்படுத்தவும், மீன் விற்பனைக்கு என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப் பட்டுள்ள தந்தை பெரியார் மீன் மார்க்கெட் பகுதியில் மட்டும் மீன்களை விற்பனை செய்யவும் அறிவுறுத்தியுள்ளார். எனவே இதுபோன்று தெருக்களில் மீன் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் தாங்களாக முன்வந்து சாலை ஓரத்தில் அமைக்கப்பட்ட கடைகளை அப்புறப் படுத்தி, மீன் மார்க்கெட்டில் விற்பனை செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த அறிவிப்பையும் மீறி சாலை ஓரங் களில் கடைகள் அமைத்து, விற்பனையில் ஈடுபட்டால் மாநகராட்சி ஊழியர்களை கொண்டு கடைகளை அப்புறப்படுத்துவது டன் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர் நல அலுவலர் பிரேமா வெளி யிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.