தஞ்சாவூர், டிச.21- தஞ்சை நாஞ்சிக்கோட்டை ஊராட்சி யில் மருதுபாண்டியர் கல்லூரியின் நுண்ணு யிரியல் துறை சார்பாக, உணவுக் காளான் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. இவ்விழாவில், மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் கொ.மருது பாண்டியன், தலைமை வகித்தார். பயிற் சிப் பட்டறையை ஊராட்சி மன்றத்தலைவர் நாஞ்சி கி.வ.சத்தியராஜ் துவக்கி வைத்தார். மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் முனை வர் மா.விஜயா, துணை முதல்வர் முனை வர் ரா.தங்கராஜ், ஆராய்ச்சி புலத்தலைவர் முனைவர் பு.அர்ச்சுனன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். உணவுக் காளான் முக்கியத்துவத்தைப் பற்றி நுண்ணுயிரியல் துறை உதவிப் பேரா சிரியர் முனைவர் மதன்ராஜ் விளக்கிப் பேசி னார். தொழில் முனைவோர் பாமா பயிற்சி பட்டறை குறித்து விளக்கினார். இப்பயிற்சி யில், 70-க்கும் மேற்பட்ட தொழில் முனை வோர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு காளான் வளர்ப்பு பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து பயிற்சி அளிக்கப்பட்டது. முன்னதாக நுண்ணுயிரியல் துறைத் தலைவர் முனைவர் எல்.பிரான்ஸ் வரவேற் றார். நுண்ணுயிரியல் துறை உதவிப் பேராசி ரியர் முனைவர் சத்தியபிரபா நன்றி கூறி னார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் இரா.கண்ணன் செய்திருந்தார்.