தஞ்சாவூர், டிச.4 - கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்போர் சங்கம் கோரி க்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் விவேகானந்தம், செயலாளர் தமிழ்ச்செல் வன் ஆகியோர் தெற்கு ரயில்வே பொது மேலாளர், தெற்கு ரயில்வே முதுநிலை பய ணிகள் போக்குவரத்து மேலாளர், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஆகியோரு க்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள கிறிஸ்துமஸ், ஜனவரி 1 புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னி ட்டு சென்னையிலிருந்து டெல்டா பகு திகளுக்கும், தென்மாவட்டங்களுக்கும் அதிக அளவில் பொதுமக்கள் சொந்த ஊருக்கு வந்து செல்வர். தமிழ்நாட்டில் மதுரை வர்த்தக நிறுவனங்கள், ஆன்மிக தலங்கள், கண் மருத்துவமனை, பொது சிறப்பு மருத்துவமனைகள் நிறைந்த நகர மாகும். எனவே, சென்னையில் வசித்து வரும் டெல்டா மற்றும் தென் மாவட்ட பொதுமக்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு வந்து திரும்ப சென்னையில் இருந்து மயிலாடுதுறை - பட்டுக்கோட்டை - காரைக்குடி - மானாமதுரை வழியாக மது ரைக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்.
இந்த ரயில் சென்னை தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு பட்டுக்கோட்டை - காரைக்குடி வழியாக காலை 9 மணி அளவில் மதுரை செல்லும் வகையில் சிறப்பு ரயில் இயக்க வேண்டும். அதனால், திருவாரூர்-காரைக் குடி பாதையில் உள்ள பயணிகள், பொது மக்கள், மாணவர்கள், வர்த்தகர்கள், முதிய வர்கள் எளிதாக மதுரைக்கு செல்லவும், மேலும் மதுரை அரவிந்த் கண் மருத்துவ மனைக்கு செல்வதற்கும் எளிதாக அமையும்.
அதேபோல், மறு மார்க்கத்தில் மதுரையில் மாலை 7 மணிக்கு புறப்பட்டு காரைக்குடி - பட்டுக்கோட்டை-திருவா ரூர்- மயிலாடுதுறை வழியாக வழியாக சென்னைக்கு காலை 5 மணி அளவில் செல்லும் வகையில் இயக்க வேண்டும். சுதந்திரத்திற்கு முன்பிருந்தே திருவாரூர்- பட்டுக்கோட்டை - காரைக் குடி ரயில் பாதை வழியாக மதுரைக்கு ரயில் வசதி இல்லாமல் இருந்து வருகிறது. இந்த சிறப்பு ரயிலை தற்போது இயக்குவ துடன் தொடர்ந்து ஜல்லிக்கட்டு விரைவு ரயில் என்ற பெயரில் தொடர்ந்து தினசரி விரைவு ரயிலாக இயக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.