தஞ்சாவூர், ஜூலை 25 - தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, திங்கட் கிழமை மாவட்ட அளவிலான போட்டி கள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவர்கள் புதன்கிழமை பெங்களூருக்கு விமானத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சருடன் பயணம் செய்ய உள்ளனர். சர்வதேச ஒலிம்பியாட் சதுரங்கப் போட்டி சென்னையில் நடைபெற வுள்ளதை முன்னிட்டு, இந்த செஸ் போட்டிகள் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட அளவில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத் தில் செஸ் போட்டியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மட்டும் முத லில் ஒன்றிய அளவில் செஸ் போட்டி கள் நடத்தப்பட்டது. இதில் 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மூன்று நிலைகளில் வெற்றி பெற்ற 270 மாணவ, மாணவிகளுக்கு திங்கட் கிழமை தஞ்சாவூர் கல்யாணசுந்தரம் மேல்நிலைப் பள்ளியில் செஸ் போட்டி கள் நடைபெற்றன. போட்டியை தஞ்சா வூர் எம்எல்ஏ டிகேஜி.நீலமேகம் துவக்கி வைத்தார். இதில் மாணவ, மாணவிகள் செஸ் போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றனர். இதில் 9-10, பிளஸ் 1- பிளஸ் 2 நிலைகளில் வெற்றி பெற்ற தலா ஒரு மாணவ, மாணவியர் மட்டும் தேர்வு செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
அங்கு நடைபெறும் செஸ் ஒலிம்பி யாட் போட்டியை பார்வையிட்ட பின்னர், ஜூலை 27 ஆம் தேதி பிற மாவட்டங்களிலிருந்து தேர்வாகி உள்ள அரசு பள்ளிகளைச் சேர்ந்த 156 மாணவ, மாணவிகள் பெங்களூருவில் நடைபெறவுள்ள செஸ் கருத்தரங் குக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழியுடன் தனி விமானத்தில் செல்ல உள்ளனர். கருத்தரங்கு முடிந்த பின்னர் அங்கிருந்து, ஜூலை 28 ஆம் தேதி சென்னை வந்து செஸ் ஒலிம்பி யாட் போட்டி துவக்க விழாவில் மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர். அதேபோல் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள நிலையில் செஸ் போட்டியில் தேர்வானர்கள், ஜூலை 28 ஆம் தேதி சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு நடை பெறும் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கல்வித்துறை செய்துள்ளதாக உடற்கல்வி ஆசிரி யர்கள் தெரிவித்தனர்.