districts

ஆதரவற்றோருக்கு போர்வை வழங்கல்

பேராவூரணி, டிச.28-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி லயன்ஸ் சங்கம் சார்பில் ஆதரவற்ற நிலை யில் சாலையோரம் குளிரில் உறங்கும் ஏழை,  எளிய மக்களுக்கு போர்வை வழங்கப் பட்டது.  நிகழ்ச்சிக்கு பேராவூரணி லயன்ஸ் சங்க தலைவர் செ.இராமநாதன் தலைமை வகித்தார். செயலாளர் ஆதித்யன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் ராஜா, பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்,  பேராவூரணி பழைய, புதிய பேருந்து  நிலையங்கள், பூக்கொல்லை, சேதுபாவா சத்திரம், ஒட்டங்காடு, திருச்சிற்றம்பலம், ஆவணம், ஏனாதிகரம்பை, செங்கமங்கலம் ஆகிய ஊர்களின் பேருந்து நிறுத்தங்களில் தங்கியுள்ள ஆதரவற்றவர்களுக்கு இல வசமாக போர்வை வழங்கப்பட்டது.