districts

மாற்றுத்திறனாளிகள் சங்க பேரவைக் கூட்டம்

தஞ்சாவூர், மார்ச் 27-  தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் மாற்றுத்திறனாளிகள் சங்க பேரவை கூட்டம், ஒன்றியத் தலைவர் டி.கஸ்தூரி தலைமையில் நடைபெற்றது.  இதில் மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன், மாவட்ட துணைத் தலை வர் ஏ.மேனகா, மாவட்ட துணைச் செயலா ளர் சி.ஏ.சந்திரபிரகாஷ், மாவட்டக் குழு உறுப்பினர் நீலாவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில்,‘உறுப்பினர் பதிவு முடிப்  பது. உரிமைக் குரல் சந்தா 50 கொடுப்பது,  மாநில கட்டிட நிதி கோட்டா 50 ஆயிரம் முடிப் பது, டெல்லி போராட்டத்திற்கு கிளைக்கு இரண்டு பேர் வீதம் 60 நபர்கள் கலந்து கொள்வது’’ என முடிவெடுக்கப்பட்டது.
புதிய கிளை
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் ஒன்றியம் நெம்மேலி திப்பியக்குடி ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளின் புதிய கிளை அமைக்கப்பட்டது. இதில், கிளைத் தலைவராக முருகேசன், செயலாளராக புவனேஸ்வரி, பொருளாளராக பாக்கியராஜ் ஆகியோர் தேர்வு செய் யப்பட்டனர்.

;