districts

தமிழ்ப் பல்கலை.,யில்  அக்குபங்சர் ஆய்விருக்கை

தஞ்சாவூர், மார்ச் 9-  தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழக மெய்யியல் துறையும், இந்திய அக்குபங்சர் ஹீலர்கள் கூட்ட மைப்பும் இணைந்து, தமிழ் பல்கலைக்கழகத்தில் அக்கு பங்சர் ஆய்விருக்கை அமைக்க உள்ளனர். இதற்காக ரூ.1 கோடியை பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவனிடம், அக்குபங்சர் ஹீலர்கள் கூட்டமைப்பின் செயலாளர் அ.உமர்பாரூக் வழங்கினார்.  அப்பொழுது, பல்கலைக் கழகத்தின் பதிவாளர் (பொ) முனைவர் சி.தியாகராஜன், மெய்யியல் துறைத்  தலைவர் முனைவர் கோ.ப.நல்லசிவம், உதவிப் பேராசி ரியர்கள், முனைவர் பொ.சுரேஷ், முனைவர் தி.பார்த்தி பன், ஹீலர்கள் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் ப.தி.ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்,