தஞ்சாவூர், ஜன.27- ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக, விவசாயிகள் - தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களை முன்னெ டுத்து வருகின்றனர். அவற் றின் ஒருபகுதியாக, ஏற்கெ னவே அறிவித்தபடி, ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில், குடியரசு தினமான (ஜனவரி 26) வெள்ளியன்று நாடு முழுவதும் டிராக்டர் பேரணி நடத்தினர். தில்லியில் விவசாயிகள் தொடர்ச்சியாக நடத்திய போராட்டத்தின் காரண மாக மூன்று வேளாண் சட் டங்களையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது.
அப் போது, விவசாயிகளுக்கு ஒன்றிய மோடி அரசு பல வாக்குறுதிகளையும் கொடுத் தது. ஆனால், அவை எதை யும் இதுவரை நிறைவேற்ற வில்லை. இந்நிலையில், குறைந்த ஆதார விலையை உறுதி செய்ய சட்டமியற்ற வேண் டும்; தில்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்; எம்.எஸ். சுவாமி நாதன் குழு பரிந்துரையை சட்டமாக்க வேண்டும்; மின் சாரத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; நூறுநாள் வேலைத் திட்டத் திற்கு தேவையான நிதியை விடுவிக்க வேண்டும்; 44 தொழிலாளர் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றி யதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து டிராக் டர் பேரணி - ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இப்போராட்டம் தமிழ கத்திலும் காவிரி பாசனப் பகுதி மாவட்டங்கள் உட்பட 33 மையங்களில் நடைபெற் றது. இப்போராட்டத்தில் 4 ஆயிரம் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் விவசாயிகள் - தொழிலாளர்கள் அணி வகுத்தனர். 10 ஆயிரத்திற் கும் அதிகமானோர் போராட் டத்தில் கலந்து கொண்ட னர். கும்மிடிப்பூண்டியில் பெ. சண்முகம், காஞ்சிபுரத்தில் ஒருங்கிணைப்பாளர் கே. பாலகிருஷ்ணன், சேலத்தில் டி.ரவீந்திரன், தர்மபுரியில் பி. டில்லிபாபு, மயிலாடுதுறை யில் சாமி.நடராஜன், திரு வாரூரில் வீ.அமிர்தலிங்கம், பி.எஸ். மாசிலாமணி, புதுக் கோட்டையில் கே.முகம்ம தலி உள்ளிட்ட விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழி லாளர் சங்கத் தலைவர்கள் பங்கேற்றனர்.