districts

img

மது அருந்தி விட்டு பெண்களை கேலி செய்யும் நபர்களை கண்டுபிடிக்க வைத்த சி.சி.டி.வி கேமிரா உடைப்பு தஞ்சாவூர் அருகே கிராம மக்கள் சாலை மறியல்

தஞ்சாவூர், டிச.4 –  தஞ்சாவூர் அருகே  சீராளூர் கிராமத்தில், மர்ம நபர்கள் சிலர் மது அருந்தி விட்டு, சாலையில் செல்லும் பெண்களையும், பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் பள்ளி, கல்லூரி மாணவிகளையும் கிண்டல் செய்தும், பொது மக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வந்துள்ளனர்.

இதையடுத்து பேருந்து நிறுத்தம் பகுதியில், கிராம மக்கள் சார்பில், சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமரா பொ ருத்தப்பட்டது. இந்நிலை யில், செவ்வாய்க்கிழமை யன்று இரவு மர்ம நபர்கள் சிலர் கேமராவை அடித்து நொறுக்கியுள்ளனர். இதை தொடர்ந்து புதன் கிழமை காலை கிராம மக்கள், சிசிடிவி கேமராவை உடைத்த மர்மநபர்களை கைது செய்யக் கோரி, திருக்காட்டுப்பள்ளி – தஞ்சா வூர் சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர். இது குறித்து  தகவல் அறிந்த கள்ளப் பெரம்பூர் காவல்துறையினர் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதா னம் செய்தனர்.  

இதற்கிடையில், சி.சி. டி.வி., கேமராவில் உடைப்ப தற்கு முன்பு பதிவான காட்சி களின் அடிப்படையில் விசா ரணை நடத்தி,  சீராளூரை சேர்ந்த சத்தியமூர்த்தி (33),  கௌரி சங்கர் (32), ஆகிய இருவரையும் கள்ளம் பெரம்பூர் காவல்துறையி னர் கைது செய்தனர். கிராம மக்கள் சாலை மறியலால், சுமார் இரண்டு மணி நேரத் திற்கும் மேலாக அப்பகு தியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.   இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், பகல் – இரவு என இல்லா மல் பலரும் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்து மது  அருந்தி விட்டு, பாட்டில்க ளை அப்படியே போட்டு விட்டு செல்கிறார்கள்.

மது பாட்டில்கள் மலைபோல குவிந்து கிடக்கிறது. மேலும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளனர். இதற்காக தான் கேமரா பொருத்தப்பட்டது. இதை உடைத்துள்ளனர். இது போன்ற நபர்கள் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.