districts

தமிழை வளர்ப்பதில் அரசியல் செய்யும் பாஜக எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம்

பாபநாசம், நவ.23- தமிழை வளர்ப்பதற்கு ஆக்கப்பூர்வ மான முன்னெடுப்புகளைச் செய்யாமல் அரசியல் செய்யும் பாஜக-வின் செயலுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘‘தமிழகத்திற்கும், காசிக்கும் இடை யிலான பாரம்பரிய தொடர்பை நிறுவும் வகையில் ஒன்றிய அரசு காசி தமிழ் சங்கமம் எனும் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வின் ஒரு பகுதியா கச் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவ னத்தின் சார்பில் முனைவர் பஷீர் அகமது  திருக்குறளை அரபியில் மொழி பெயர்த்த நூலை இந்தியப் பிரதமர் வெளி யிடுவதாகத் தகவல்கள் வருகின்றன.  நூல் வெளியீட்டு விழாவில் நூலின் ஆசிரியர் அழைக்கப்பட்டு அவர் முன்னி லையில் வெளியிடுவது தான் பண்பாட்டு மரபாக இருந்து வருகிறது. இந்த மரபைத் தவிர்த்து விட்டு நிகழ்வு நடத்தப்படுவது ஏற்புடையது அல்ல;  தமிழகத்தில் இருக்கும் முதுப்பெரும் தமிழ் அறிஞர்கள் எவருக்கும் அழைப்பு  விடுக்காமல் முழுக்க முழுக்க பாஜக நிர்வாகிகளை வைத்துக்கொண்டு ஏதோ கட்சி நிகழ்ச்சி போல் ஒருங்கி ணைக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.  ஒன்றிய அரசின் நிதியில் பாஜக தனது சுயலாபத்திற்காக இது போன்ற நிகழ்வு களை நடத்தி வருவது தவறான வழிகாட்டுதலாகும். தமிழக மாணவர்களை ஏதோ ஆன்மீக சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வது போல மதரீதியான முன்னெடுப்பைச் செய்திருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.  நீண்ட நெடிய பாரம்பரியத்தையும், பண்பாட்டையும், வளத்தையும் கொண்ட தமிழை வளர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளைச் செய்யாமல் அரசியல் செய்யும் பாஜக-வின் இந்த செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.  இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.