தஞ்சாவூர், மே 11 - தஞ்சை கரந்தையில் ஆடிட்டர் ஒருவர் முன் விரோதம் காரணமாக அரிவா ளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை கரந்தை சேர்வைக்காரன் தெருவை சேர்ந்தவர் ஆடிட்டர் மகேஸ் வரன்(45). இவர் தன் வீட்டுக்கு அருகில் தென்னந் தோப்பில் பண்ணை ஒன்று வைத்துள்ளார். அதில் ஆடு, கோழி, போன்றவற்றை வளர்த்து வருகிறார். இந்த பண்ணைக்கு எதிரில், மாநகராட்சி குளியல் மற்றும் கழிப்பறை கட்டிடம் உள்ளது. இதை ஆடிட்டர் மகேஸ்வ ரன் சமீபத்தில்தான் ஏலத்திற்கு எடுத்துள்ளார். இந்த ஏலம் விவகாரத்தில் மகேஸ்வரனுக்கும் சிலருக் கும் முன்விரோதம் ஏற்பட்ட தாக கூறப்படுகிறது. இந்நிலையில், செவ்வாய்க் கிழமை இரவு தனது பண்ணையில் மகேஸ் வரன் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத மூன்று பேர் கொண்ட கும்பல் அந்த பண்ணைக்குள் புகுந்து மகேஸ்வரனை சர மாரியாக வெட்டிக் கொன்று விட்டு அங்கிருந்து தப்பி யோடியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்த போது மகேஸ்வரன் ரத்த வெள்ளத் தில் இறந்து கிடந்தார். இது குறித்து தஞ்சை மேற்கு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத் திற்கு மேற்கு காவல்நிலைய ஆய்வாளர் சந்திரா மற்றும் காவல்துறையினர் விரைந்து சென்று மகேஸ்வரன் உடலைக் கைப்பற்றி, உடற் கூராய்வுக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்த னர். இதுகுறித்து மகேஸ்வ ரன் மனைவி நிஷா புகார் அளித்துள்ளார். மேலும், கொலை தொடர்பாக கரந்தை பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (26), மணிகண்டன் (29), குமரேசன் (29), கார்த்திக் (35) ஆகிய நால்வரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.