districts

குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம்

தஞ்சாவூர், மே 4 - தஞ்சாவூர் மாவட்டத்தில் மது விலக்கு குற்ற வழக்குகளில் கைப் பற்றப்பட்ட இரண்டு மற்றும் நான்கு சக்கர மோட்டார் வாகனங்களை பொது ஏலத்தில் விட, மாவட்ட ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆவிவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ரவளிப்ரியா கந்தபுனேனி ஆகி யோர் உத்தரவிட்டுள்ளனர்.  பொது ஏலமானது, மே 11 (புதன் கிழமை) அன்று காலை 10 மணிக்கு,  தஞ்சாவூர் நீதிமன்றச் சாலை  பழைய ஆயுதப்படை மைதா னத்தில் நடைபெற உள்ளது. ஏலத்திற்குண்டான வாகனங்கள் பழைய ஆயுதப்படை மைதானத் தில், மே 10 அன்று காலை 7 மணி  முதல் ஏலம் நடைபெறும் நேரம் வரை  பார்வைக்காக வைக்கப்படும்.  ஏலம் எடுக்க விருப்பமான வர்கள் மே 11 அன்று காலை 8 முதல் 10 மணி வரை ரூ.1,000 முன்வைப் புத் தொகை செலுத்தி, ஏலம் எடுக்க  தங்கள் பெயர்களை ஆதார் கார்டு நகலுடன் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் ஏலம் எடுத்தவர்கள், ஏலத்தொகையுடன் இரண்டு சக்கர வாகனத்திற்கு ஜிஎஸ்டி விற்பனை வரி 12 விழுக்காடு மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு, ஜிஎஸ்டி விற் பனை வரி 18 விழுக்காடு ஆகிய வற்றை ஏலத்தொகையுடன் சேர்த்து, மே 11 அன்று உடனே செலுத்திட வேண்டும் என தஞ்சை மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.