districts

இன்று அட்மா திட்ட பயிற்சி

பாபநாசம், அக்.11 - தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வேளாண் உதவி இயக்குநர் (பொ) சுஜாதா விடுத்துள்ள செய்திக் குறிப்பில், திருவையாறு வட்டாரம் ஆவிக்கரை கிராமத்தில் அக்.12 (புதன்கிழமை) காலை 10 மணியளவில் இயற்கை வேளாண்மை தொடர்பான அட்மா திட்ட ஒரு நாள் பயிற்சி நடைபெற உள்ளது. இதில் இயற்கை வேளாண்மை தொ டர்பாக தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட உள்ளது.  இயற்கை முறையில் பூச்சி, நோய்களை கட்டுப்படுத்த பஞ்சகவ்யா, அமிர்த கரைசல், ஜீவாமிர்தம், கன ஜீவா மிர்தம், அக்னி அஸ்திரம், மீன் அமிலம், கற்பூர கரைசல் ஆகியவை தயாரிக்கும் முறைகள் விவசாயிகளுக்கு வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் முன்னோடி விவசாயி களால் செய்து காட்டப்பட உள்ளன. ஆர்வமுள்ள விவசாயி கள் அனைவரும் இப்பயிற்சியில் தவறாது கலந்து கொண்டு  பயன்பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

;