districts

img

திருபுவனத்தில் வாடகை வீட்டில் இயங்கும் நூலகம்

கும்பகோணம், நவ.17- தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமரு தூர் தாலுகாவில் உள்ள திருபுவனம் பேரூ ராட்சியில் செயல்பட்டு வரும் நூலகம் காற்  றோட்டம் இல்லாத ஒரு வீட்டில் சுகாதார மற்ற முறையில்  செயல்பட்டு வருகிறது. இதற்கு வாடகை ரூ.6,000. திருவிடைமருதூர் தொகுதியில் வாடகை வீட்டில் இயங்கும் ஒரே நூலகம் இதுதான். திருபுவனம் பேரூராட்சியில் உள்ள  அரசு மேல்நிலைப்பள்ளி,  திகோ சில்க்ஸ் மேல்நிலைப்பள்ளி சௌராஷ்ட்ரா உயர்நிலைப்பள்ளி முஸ்லிம் பள்ளி ஆகியவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு என உதவிகரமாக உள்ள நூலகம் இது. படிக்க போதுமான வசதிகள் நூல கத்தில் இல்லை. இந்த நூலகத்திற்கு சொந்த கட்டடம் கட்டித் தர அரசிடமும் சட்ட மன்ற உறுப்பினரிடமும் பேரூராட்சி நிர்வா கத்திடம் பலமுறை மக்கள் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் -கலைஞர் சங்கம் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து திருபுவனம் மேல வீதியில்  அரசு புறம்போக்கு இடம் கண்டறியப்பட்டு நூலகம் கட்ட ஒப்புதல் பெற துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நான்காண்டுகளாகியும் கட்டடம் கட்டுவதற் கான அறிகுறிகளே இல்லை.