கும்பகோணம், அக்.17 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநறையூர் கிராமத்திலிருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாண வர்கள் மற்றும் பணிக்காக செல்வோர் கும்பகோணத்திற்கு பேருந்தில் சென்று வருகின்றனர். இந்நிலையில் காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரை பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்வதில்லை எனக் கூறி பலமுறை அரசு போக்கு வரத்து கழக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. காலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காததை கண்டித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து தகவலறிந்து வந்த நாச்சியார் கோவில் போலீசார், நாச்சியார்கோவில், திருநறையூர் ஊராட்சி மன்ற தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது.