districts

img

மனோரா கடற்கரையில் 15 ஆயிரம் பனை விதைகள் விதைக்கு பணி துவக்கம்  

பேராவூரணி, டிச.25-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மனோரா  கடற்கரையில் 15 ஆயிரம் பனை விதைகளை விதைக்கும்  பணியை மாணவர்கள் தொடங்கி வைத்தனர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்டக் குழுமம், ஓம்கார் பவுண்டேசன், இந்தி யன் ரெட் கிராஸ் சொசைட்டி, மனோரா ரோட்டரி கிளப்,  பட்டுக்கோட்டை விதை அறக்கட்டளை, கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம், கிரீன் நீடா சுற்றுச் சூழல் அமைப்பு இணைந்து டெல்டா மாவட்ட கடற்கரை  பகுதிகளில் 5 லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணி யின் தொடக்க விழா பேராவூரணியை அடுத்த மனோரா  கடற்கரையில் தொடங்கியது. பின்பு கடற்கரை பகுதிகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவு  பொருட்களை சேகரித்து சேதுபாவாசத்திரம் ஒன்றிய சுகா தாரத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பனை விதைகள் விதைக்கும் பணியை திருவாரூர்  மாவட்ட வனத்துறை அலுவலர் முனைவர் கே.அறி வொளி, நாட்டு நலப்பணித் திட்ட மாநில ஒருங்கிணைப் பாளர் முனைவர் ம.செந்தில்குமார், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பா ளர் முனைவர் அ.இலக்குமி பிரபா ஆகியோர் தொடங்கி  வைத்தனர். இப்பணியில் மன்னை இராஜகோபாலசாமி அரசி னர் கலைக் கல்லூரி, செங்கமலத்தாயார் கலை அறிவியல்  கல்லூரி, மீனாட்சி சந்திரசேகரன் கலை அறிவியல் கல்லூரி,  காதர் முகைதீன் கல்லூரி, பேராவூரணி அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.