தஞ்சாவூர், ஜூன் 21- தஞ்சாவூர் மாவட்டம், மதுவிலக்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் முருகதாசன் உத்தரவின் பேரில், பட்டுக் கோட்டை மதுவிலக்கு ஆய்வாளர் ஜெயா தலைமையில் காவ லர்கள் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்.
பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டி, தம்பிக்கோட்டை மேலக்காடு, தம்பிக்கோட்டை வடகாடு மற்றும் தம்பிக் கோட்டை சின்னாத்தங்காடு உள்ளிட்ட பகுதிகளில் பட்டுக் கோட்டை மதுவிலக்கு காவல் ஆய்வாளர் ஜெயா தலைமை யில், தலைமை காவலர் மற்றும் காவலர்கள் கள்ளக்குறிச்சி சம்பவத்தின் எதிரொலியாக அதிரடியாக ஆய்வில் ஈடுபட்ட னர்.
வெள்ளிக்கிழமை பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக் கோட்டை சின்னத்தங்காடு பகுதியில் ஆய்வில் ஈடுபட்ட பொழுது, ஐந்து பேரல்களில், 150 லிட்டர் ஊறல் சாராயம், அதாவது கள்ளச்சாராயம் தயாரிப்பதற்கு முந்தைய படிநிலை யில் மூலப் பொருள்கள் கலந்த கலவையான ஊரல் சாராயம் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
அந்த சாராய உற்பத்தியில் ஈடுபட்ட தம்பிக்கோட்டை சின்னாத்தங்காடு பகுதியை சேர்ந்த நாகராஜ் (78), கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அவருக்கு உடந் தையாக இருந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட மற்ற நபர்களை மதுவிலக்கு அமல் பிரிவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதேபோல் பட்டுக்கோட்டை அருகே சாராயம் காய்ச்சு வதில் ஈடுபடும் கிராமங்களில் தீவிர சோதனையில் நடத்தப்படு கிறது. முன்னாள் மற்றும் இந்நாள் சாராயம் காய்ச்சும் பழக்கம் உள்ள குற்றவாளிகளையும் தேடிப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.