districts

img

103 மாத கால அகவிலைப்படி உயர்வை உடனே வழங்கிடுக

தஞ்சாவூர், ஜூலை 4 -  103  மாத கால அகவிலைப் படி உயர்வை உடனே வழங்க வேண்டும். 2022 டிசம்பர் முதலான பலன்க ளை வழங்க வேண்டும். ஒப் பந்த முறை பணி நியம னத்தை கைவிட வேண்டும். வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். இதர துறைகளைப் போல மருத்து வக் காப்பீடு வழங்க வேண் டும். மீண்டும் பழைய ஓய் வூதியத் திட்டத்தை அம லாக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலி யுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் தஞ்சாவூர், கும்ப கோணத்தில் வியாழக்கிழ மையன்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் விரைவு போக்குவரத்து கழக பணி மனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு  தஞ்சை மாவட்டச் செயலாளர் எஸ்.ஞானசேகரன் தலைமை வகித்தார். சிஐடியு விரைவு போக்குவரத்துக் கழக மாநில துணைத்தலைவர் பி. வெங்கடேசன் துவக்கவுரை யாற்றினார். சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் சா. செங்குட்டுவன் ஆதரித்துப் பேசினார். தஞ்சை கிளைச் செயலாளர் பாஸ்கரன்,  தஞ்சை கிளைத் தலைவர் கார்த்திகேயன், மூத்த தோ ழர் தூயமணி ஆகியோர்  உரையாற்றினர். கிளை பொருளாளர் கே.பத்மநா பன் மற்றும் பலர் பங்கேற்ற னர். 

கும்பகோணம்

கும்பகோணம் அரசு போக்குவரத்து தலைமைய கம் முன்பு  நடைபெற்ற  ஆர்ப் பாட்டத்திற்கு தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் அண் ணாதுரை, ஏகாம்பரம் திருநா வுக்கரசு, அரசு உள்ளிட்டோர் பேசினர்.