districts

img

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது எப்போது?

சேலம், ஜூன் 4- மேட்டூர் அணையிலிருந்து, நடப் பாண்டு காவிரி டெல்டா பாசனத் திற்கு தண்ணீர் திறப்பு தள்ளிப் போவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணை பாசனம் மூலம் 12 காவிரி  டெல்டா மாவட்டங்களில் உள்ள 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு, ஜூன் 12 ஆம் தேதி  முதல் ஜனவரி 28 ஆம் தேதி வரை, 230 நாட்களுக்கு 330 டிஎம்சி தண் ணீர் தேவைப்படும். பாசன பகுதிக ளில் பெய்யும் மழையை பொறுத்து, பாசனத்திற்கான தண்ணீர் தேவை குறையும். அணையின் நீர்மட்டம் 90  அடியாக இருந்து, நீர்வரத்து திருப் திகரமாக இருந்தால், பருவம ழையை எதிர்நோக்கி டெல்டா பாச னத்திற்கு மேட்டூர் அணையிலி ருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். மேட்டூர் அணையின் 90 ஆண்டு கால வரலாற்றில், குறித்த நாளான ஜூன் 12 ஆம் தேதியில், 19  ஆண்டுகள் மட்டுமே டெல்டா பாச னத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள் ளது. அணையின் நீர் வரத்தும், இருப்பும் திருப்திகரமாக இருந்த தால், விவசாயிகளின் வேண்டு கோளை ஏற்று 11 ஆண்டுகள் ஜூன்  12ம் தேதிக்கு முன்பாகவே பாசனத் திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள் ளது. அணையின் நீர் இருப்பும், வரத் தும் திருப்திகரமாக இல்லாததால், 60 ஆண்டுகள் தாமதமாக தண் ணீர் திறக்கப்பட்டுள்ளது. நடப்பு  நீர்ப்பாசன ஆண்டில், 91 ஆவது ஆண்டாக மேட்டூர் அணையிலி ருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12ல் தண்ணீர் திறக்கப்பட வேண்டும். இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், அணையின் நீர் மட்டம் 46.11 அடியாகவும், நீர்வ ரத்து 124 கனஅடியாகவும் உள்ளது.  நீர்வரத்து குறைந்ததாலும், அணை யிலிருந்து குடிநீர் தேவைகளுக் காக விநாடிக்கு 2,100 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவதாலும், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

தென்மேற்கு பருவமழை முன் கூட்டியே தொடங்கினாலும், கர் நாடகா அணைகள் நிரம்பிய பிறகே, தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால் நடப்பு நீர்ப்பாசன ஆண்டில், குறித்த நாளான ஜூன் 12 ஆம் தேதி மேட் டூர் அணையிலிருந்து குறுவை சாகு படிக்கு தண்ணீர் திறப்பு தள்ளிப் போகும் என கூறப்படுகிறது. தண் ணீர் திறப்பு தள்ளிப்போனால், குறுவை சாகுபடி பாதிக்கும் என்று  டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.