districts

img

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பபெற வலியுறுத்தி உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூலை 31- பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சேலம் பழைய பேருந்து நிலையம் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெட்ரோல், டீசல்,கேஸ் விலை உயர்விற்கு காரணமான ஒன்றிய அரசை கண்டித்தும்,பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை திருமப்பெற வலியுறுத்தியும், சேலத்தில் சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைரமணி தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாநில செயலாளர் கே.சி.கோபி குமார், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர். வெங்கடபதி, ஏ.கோவிந்தன், விசைத்தறி சங்க செயலாளர் பி.சந்திரன் கட்டுமான சங்க செயலாளர் மயில்வேலன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

;