districts

img

வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இருசக்கர வாகன பேரணி

சேலம், மார்ச் 7-

ஏற்காட்டில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இரு சக்கர வாகன பேரணி சனியன்று நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில், சனியன்று வாக்கா ளர் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி தேர்தல் துணை வட்டாட்சியர் தேவி தலைமையில், ஒண்டிக் கடை பகுதியில் நடைபெற்றது. இதில், பேரணியானது படகு இல்லம், அரசினர் மேல்நிலைப் பள்ளி, ஜெரி னாக்காடு, கடை வீதி, பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதி களை கடந்து மீண்டும் ஒண்டிக்டை பகுதியில் நிறை வடைந்தது.

இப்பேரணியில், 18 வயது நிரம்பியவர்கள் அனை வரும் வாக்களிக்க தகுதியானவர்கள். வாக்காளர்கள் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். வாக்காளிக்க யாரேனும் பணம் தந்தாலோ, குறிப்பிட்ட வர்களுக்குதான் வாக்களிக்க வேண்டும் என யாரே னும் நிர்பந்தித்தாலோ, 1950 என்ற இலவச தொலை பேசி எண்ணிற்கு தகவல் கொடுக்கலாம்.  புகாரின் பேரின் நடவடிக்கை எடுக்கப்படும், புகார் கொடுத்த வர்கள் விவரம் வெளியிடப்படாது என அறிவுறுத்தப் பட்டது.

;