districts

img

மதுவில் தின்னரை கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு

கொளத்தூர் அருகே  தின்னரை மதுவில் கலந்து குடித்த 2 பேர் உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே பெயிண்ட் அடிக்க பயன்படுத்தப்படும் தின்னரை மதுவில் கலந்து குடித்த 2 பேர் நேற்றிரவு உயிரிழந்தனர். இதுகுறித்த விசாரணையில் கொளத்தூரைச் சேர்ந்த மாதப்பன் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் என தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து கொளத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

;