சேலம், மே 18-
சேலத்தில் இளைஞர் ஒருவர் தனது பிறந்த நாளை முன் னிட்டு ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி பிறந்தநாளை கொண்டாடியது பாராட்டை பெற்றுள்ளது. கொரனோ இரண்டாம் அலை பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது இந்நிலையில், முழு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தியதால் சாலையோரம் மற்றும் ஆதரவற்றோர் உண வின்றி அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்க ளுக்கு தன்னார்வலர்கள் உணவுப் பொருட்கள் வழங்கி வரு கின்றனர். சேலம் அயோத்தியாபட்டணம் பகுதியைச் சேர்ந்த சிவா என்ற இளைஞர் தனியார் மருத்துவமனையில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்நிலை யில், செவ்வாயன்று அவருடைய பிறந்த நாளில் ஏழை, எளிய மக்களுக்கு உதவும் நோக்கில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகே ஊரடங்கு காரணமாக சாலையோரம் மற்றும் ஆதரவற்றோர் அதிகளவில் உணவின்றி தவித்து வந்தனர். இதனால் அங்கு சென்ற இளைஞர் தனது பிறந்தநாளை ஆதர வற்ற முதியோர்களுக்கு உணவு மற்றும் முகக்கவசம் வழங் கினார். முதற்கட்டமாக செவ்வாயன்று 300 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த பணி இந்த ஊரடங்கு உத்த ரவு முடியும் வரை தொடர்ந்து செயல்படுத்த வேண்டு மென்று சிவா கூறினார்.