districts

img

சேலத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார், இந்நிலையில் ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் புதுப்பாளையம் ஊராட்சி, அரிசிபாளையத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. அப்பள்ளியில் பாச்சாலியூா் பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் (42)ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவர் பள்ளியில் உள்ள மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து மாணவி, பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து மாணவியின் பெற்றோர் கொங்கணாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் கொங்கணாபுரம் காவல்துறையினர் ஆசிரியர் பழனியப்பன் மீது வழக்குப் பதிந்து போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும், விசாரணை நடந்து வந்த நிலையில், ஆசிரியர் பழனியப்பனை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது