districts

img

சேலத்தில் குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டம்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை நகராட்சி 22 வது வார்டுக்கு உட்பட்ட பாப்பாபட்டி காட்டுவளவு பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் கடந்த ஒரு மாதங்களாகக் குடிநீர் விநியோகம் முறையாக நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் 16.ம் தேதி சனிக்கிழமை அன்று இளம்பிள்ளை- சின்னப்பட்டி பிரதான சாலை பாப்பாபட்டி காட்டவு வளவு பகுதியில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களை வைத்து சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மகுடஞ்சாவடி போலீசார் மற்றும் சங்ககிரி டிஎஸ்பி ராஜா மற்றும் இடங்கணசாலை நகராட்சி கமிஷனர் சேம் கிங்ஸ்டன் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். முறையாகக் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர். அதன் பின்னர் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது...