சேலம், ஜூன் 17- சாலை வசதி கேட்டு பொது மக்கள் சேலம், செம்மண் திட்டு பகுதியில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் சித்தர் கோயில், செம் மண் திட்டு என்ற பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த மூன்று தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் போதிய சாலை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். மேலும், இந்த பொதுப் பாதையை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்து, யாரும் நடந்து வரக்கூடாது என்று மிரட்டிய தாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், அரசு அதிகாரிகளின் அலட்சியத்தை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த ச் நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் சேலம் - இளம்பிள்ளை பிர தான சாலையில் திடீரென அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட் டனர். இதனையடுத்து, சேலம் கொண்டலாம்பட்டி காவல் உதவி ஆணையாளர் ஆனந்தி தலைமை யிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக சாலை வசதி அமைக்க நடவடிக்கை எடுக்கப் படும் என்று உறுதி அளித்தனர். இதனையேற்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.