districts

img

மலைக்குறவன் பழங்குடியின மக்களுக்கு பழங்குடியின சான்று வழங்குக

சேலம், பிப்.24-

சாதி சான்று கேட்டு விண்ணப்பித்துள்ள மலைக்குறவன் பழங்குடியின மக்களுக்கு உடனடியாக பழங்குடி சான்று வழங்க வேண்டும் என சேலம் மாவட்ட மலைக் குறவன் கல்வி மற்றும் பொருளாதார முன் னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், துலுக்கனூர் பகுதியில் மலைக் குறவன் பழங்குடியினர் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்ற சங்கம் சார்பில் சிறப்பு பேர வைக் கூட்டம் நடைபெற்றது. இப்பேர வைக்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் டி.செந்தில்குமார் முன்னிலை வகித்தார். இதில், சங்கத்தின் பெயர் பலகையை திறந்து வைத்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங் கத்தின் மாநில தலைவர் பி.டில்லிபாபு சிறப்புரையாற்றினார்.  இக்கூட்டத்தில், சாதிச்சான்று கோரி விண்ணப்பித்துள்ள மலைக்குறவன் பழங் குடியின மக்களுக்கு உடனடியாக பழங் குடியினர் சான்று வழங்கிட வேண்டும்.  வன உரிமைச்சட்டம் 2006 முழுமையாக அமல் படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில், சங்கத்தின் மாநில செயலாளர் ஏ.வி. சண் முகம் மாநில பொருளாளர் பி. பொன்னு சாமி சிபிஎம் தாலுகா செயலாளர் முருகே சன் வட்ட செயலாளர் ராமசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;