districts

img

விவசாயத்தையும், விவசாயிகளையோம் பாதுத்திடுக விவசாயிகள் உறுதிமொழி ஏற்பு

சேலம், ஜன.1- விவசாயத்தையும், விவசாயிக ளையும் பாதுகாக்க நாடு முழுவ தும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  சேலம் மாவட்டத்தில், மேச் சேரி, சங்ககிரி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடை பெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச் சியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பி.தங்கவேலு, ஒன்றி யத் தலைவர் எம்.ரத்தினவேல், ஒன்றிய செயலாளர் ஜி.மணி முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, கொங்கணா புரத்தில் நடைபெற்ற நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றிய செயலாளர் பழனி யப்பன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் எஸ்.வெங்கடேசன், ஒன்றிய துணைச் செயலாளர் செம்மலையப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

ஈரோடு  

இதேபோல் ஈரோடு மாவட் டம், ரங்கம்பாளையத்தில் நடை பெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கே.துரைராஜ், ஆர். நடராஜ், பேராசிரியர் பெருமாள், பி.ராஜா, என்.பழனிச்சாமி உட் பட பலர் கலந்து கொண்டனர்.

;