districts

img

குடிநீர் விநியோகத்தை தனியாருக்கு வழங்குவதா? சேலம் மாநகராட்சியை கண்டித்து சிபிஎம் போராட்டம்

சேலம், டிச.26- சேலம் மாநகராட்சியின் குடிநீர் விநியோ கத்தை தனியாருக்கு வழங்குவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாநகராட்சியின் குடிநீர் விநியோ கத்தை தனியாருக்கு வழங்குவதால், குடி நீர் விற்பனையாக மாறக்கூடிய சூழ்நிலை ஏற் படும். இதனால் குடிநீர் கட்டணம் மற்றும் வைப்புத்தொகை பல மடங்கு உயரும் அபா யம் ஏற்பட்டுள்ளது. பொதுக்குழாய்கள் அகற் றப்படும் சூழ்நிலை ஏற்படும். மேலும், ஏழை மக்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலை ஏற் படும். போர்வெல் நீரின் பயன்பாடு அதிகமா கும். இதனால் மக்களுக்கு உடல்நல கேடுகள் உருவாகும். எனவே, சேலம் மாநகரத்தில் குடி நீர் விநியோகம் மாநகராட்சி நிர்வாகம் மூலம் மட்டுமே விநியோகம் செய்ய வேண்டும். தனி யார் நிறுவனங்களை எந்த விதத்திலும் பயன் படுத்தக்கூடாது என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் சேலம்  வடக்கு மாநகர செயலாளர் என்.பிரவீன் குமார் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா, கிழக்கு  மாநகர செயலாளர் பொன்.ரமணி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.பாலகிருஷ்ணன், ஆர்.வைரமணி சேலம் மேற்கு, வடக்கு, கிழக்கு மாநகரக்குழு உறுப்பினர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.