districts

img

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி: எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணியை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் தின்னப்பட்டி அருகே உள்ள பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் உதவியாளராக கடந்த 10 ஆண்டு காலமாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர், கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவருக்கு அரசு போக்குவரத்து கழகத்தின் உதவி பொறியாளராக வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சம் பெற்று ஏமாற்றியுள்ளார். இது தொடர்பாக தமிழ்ச்செல்வன் கடந்த  மாதம் 26ஆம் தேதி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். 
புகாரின் பேரில் சேலம் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் மணி, இடைத்தரகர் செல்வகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 
இதில் உதவியாளர் மணி, அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி பல கோடி மோசடி செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து சேலம் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. இளமுருகன் தலைமையிலான தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். 
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் உதவியாளர் மணியை இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;