சிறுமியை கழுத்தை துண்டித்து கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை விதித்து சேலம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சுந்தர புரத்தைச் சேர்ந்த தினேஷ் குமார், கடந்த 2018 ம் பூ கட்டுவதற்கு நூல் கேட்ட சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற நிலையில் அச்சிறுமி தன்னுடைய வீட்டில் கூறிவிடுவேன் என சொல்லி தப்பிக்க முயன்றார். அப்போது ஆத்திரத்தில் சிறுமியின் தலையை தனியாக துண்டித்து கொலை செய்த வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கழுத்தை அறுத்துக் கொன்ற வாலிபர் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்த நிலையில் நீதிபதி எம் முருகானந்தம் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டார். மேலும் 25 ஆயிரம் அபராதம் விதித்து அந்த தொகையை சிறுமி குடும்பத்திற்கு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.