districts

இந்துக்களின் உண்மையான எதிரியான பாஜகவை அம்பலப்படுத்துவோம்!

சேலம்,ஜன.21- திமுக இளைஞரணியின் இரண்டா வது மாநாடு சேலத்தில் ஞாயிறன்று (ஜன.21) நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை யில்  கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி கொடி ஏற்றி தொடங்கி வைத்தார்.  

மாநாட்டில் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கட்சி யின் மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், டி.ஆர்.பாலு, அ.ராசா,அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சட்டமன்ற உறுப்பினர் கோ.வி.செழியன், வழக்கறிஞர்கள் அருள்மொழி, மதிவதனி, திமுக  பேச்சாளர்  திண்டுக்கல் லியோனி, ஊட கவியலாளர் லெனின் உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றி னர்.  மாநாட்டில் ஆயிரக்கணக்கான  தொண்டர்கள் கலந்துகொண்டனர்.  கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.  

தீர்மானங்கள் 
மாநாட்டில் பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.  உயிர்பலி வாங்கும் நீட் நுழைவுத் தேர்வை ஒழிக்கும் வரை போராட் டம் ஓயாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வை ரத்து செய்யும் சட்ட முன்வடிவை சட்டமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களின் பேராதரவுடன் தமிழ்நாடு அரசு இரண்டு முறை நிறைவேற்றியும், ஜனநாயக மாண்புகளை மதிக்காமல் செயல்பட்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மாநாட்டில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மாணவர்களின் எதிர்காலத்தைப் பலி கொடுக்க நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசின் கொடூர மனப்பான்மையை இந்திய அளவில் அம்பலப்படுத்தவும் திமுக  இளைஞர் அணி மாநாட்டில் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.

குலக்கல்விக்கு எதிர்ப்பு 

விஸ்வகர்ம யோஜனா என்ற பெயரில் குலக்கல்வி முறையைக் கொண்டு வருவது சமூக நீதிக்கு முற்றிலும் எதிரானது என்பதால், தேசிய  கல்விக் கொள்கையைக் முழுமை யாக எதிர்ப்பதுடன், தமிழ்நாட்டில் மட்டுமின்றிப் பிற மாநிலங்களிலும் தேசிய கல்விக் கொள்கையை நடை முறைப்படுத்தும் போக்கை எதிர்த்து மாணவர்-இளைஞர் அமைப்புகளுடன் இணைந்து நாடு தழுவிய அளவிலான போராட்டங்களை இளைஞர் அணி முன்னெடுக்கும். 
கல்வியை மாநில அரசிடம் விட்டுவிடுக!

பொதுப்பட்டியலில் உள்ள கல்வியையும் மருத்துவத்தையும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றிட வேண்டும்,  தமிழ்நாட்டின் செம்மை யான உயர்கல்வி-ஆராய்ச்சிக் கல்வி நீடித்திட, பல்கலைக்கழக வேந்தர் எனும் உயர் பொறுப்புக்கு, நியமனப் பதவியில் உள்ள ஆளு நருக்குப் பதிலாக, மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசின் முதலமைச் சரே தகுதியானவர் என்பதால், பல்கலைக்கழக வேந்தராக முதல மைச்சர்  செயல்படுவார் என்கிற தமிழ் நாடு அரசின் சட்ட முன்வடிவை ஆதரிப்பதுடன், அதனை விரைந்து நிறைவேற்றவேண்டும் என மாநாடு கோரியுள்ளது.

ஆளுநர் பதவியை நிரந்தரமாக அகற்றிடுக!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை, குறிப்பாக, பா.ஜ.க  ஆட்சியில்லாத மாநில அரசுகளை,  நியமனப் பதவியான ஆளுநர் பதவி யைக் கொண்டு செயல்படவிடாமல் தடுக்க முயற்சித்து, ஆளுநர்களைக் கொண்டு இணை அரசாங்கம் நடத்துவதற்குத் திட்டமிடும் ஒன்றிய பா.ஜ.க அரசின் ஜனநாயக விரோதப் போக்கிற்கு மாநாட்டில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

வல்லாதிக்கப் போக்கு 
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநிலத் தகுதி வழங்கப்பட வேண் டும் என்றும், மாநிலங்களை நகராட்சி களைப் போல நடத்த நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசின் வல்லாதிக்கப் போக்கைக் கண்டித்து மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அமலாக்கத்துறையை கைப்பாவையாக்கிய அரசு 
அமலாக்கத்துறை, மத்திய  புலனாய்வுத்துறை, வருமானவரித் துறை போன்ற அம்புகளைத் தொடுத்து,  பா.ஜ.க. அல்லாத ஆட்சி நடை பெறும் மாநிலங்களில் உள்ள ஆளுங் கட்சியினர் மீதும், பா.ஜ.க.வை எதிர்க்கின்ற கட்சிகள் மீதும் வன்மத்து டன் பாய்ச்சுகின்ற ஒன்றிய பா.ஜ.க. அரசின் பழிவாங்கும் அரசியல் போக்கிற்கு மாநாட்டில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்துக்களின் உண்மையான எதிரி பா.ஜ.க 

`10 ஆண்டுகால ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் சமையல் சிலிண்டர் விலை, பெட்ரோல்-டீசல் விலை ஆகியவற்றைக் கடுமை யாக உயர்த்தி, மக்களை வாட்டி வதைக்கிறது. ஆண்டுக்கு 2 கோடி  இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வாக்குறுதியும் விவசாயிகளின்  வருமானம் இரண்டு மடங்காகும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப் படவில்லை. 
இந்துக்களை 10 ஆண்டுகாலமாக ஏமாற்றிவிட்டு, இராமர் கோவிலைக் காட்டி, இந்துக்கள் ஓட்டுகளை வாங்கிவிடலாம் என அரசியல் கணக்கு டன், கடவுளையும் ஏமாற்ற நினைக்கும்  பாஜக தான் இந்து மக்களின் உண்மை யான எதிரி; அதன் மதவாத  அரசியலை வீடு வீடாக அம்பலப்படுத் தும் பரப்புரையை மேற்கொள்ளவும் திமுக இளைஞர் அணி மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.