சேலம் ஜூலை 18- காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி சுகாதாரத் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசாணை எண்கள் 337 மற்றும் 338 திரும்பப்பெற வேண்டும். 88 நலக் கல்வி யாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தொழில்நுட்ப நேர் முக உதவியாளர் பதிவு உயர்வு வழங்க வேண்டும். நேரடி பணி நியமன நட வடிக்கைகளை முற்றிலும் கைவிட்டு, ஜேஇ பணியிடங்களை பதவி உயர்வு மூலமாக மட்டுமே நிரப்ப வேண்டும். புள்ளியியல் உதவியாளர் மற்றும் இள நிலை நீர் பகுப்பாய்வாளர் பணியிடங் களுக்கான பதவி உயர்வில், தகுதி யுள்ள சுகாதார ஆய்வாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், பணி அமைப்பு விதிகளில் உரிய திருத்தம் செய்ய வேண்டும். எம்டிஎம் சுகாதார ஆய்வாளர்கள் மாத ஊதியத்தை ரூ.20 ஆயிரம் என நிர்ணயம் செய்ய வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி பொது சுகாதாரத்துறை அலுவ லர் சங்கத்தினர் வியாழனன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.பிரபாகர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலா ளர் ஏ.சண்முகம் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் வி.செல்வம், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் பி.சுரேஷ், நிர்வாகிகள் முருகப் பெருமாள், என்.திருநாவுக்கரசு, டி.சிங் கராயன், கே.கனகராஜ், டி.செல்வம் உட் பட பலர் கலந்து கொண்டனர்.