districts

img

ஆதிக்க சாதியினருக்கு துணை போகும் வட்டாட்சியரை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

சேலம், ஆக.5- ஆதிக்க சாதியினருக்கு துணை போகும் காடையாம்பட்டி வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், காடையாம்பட்டி, பெத்தேல் காலனியில் வசிக்கும் மக்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சுடுகாட்டிற்கு செல்லும் சாலையை மீட்டுத்தர வேண்டும். ஆதிக்க சாதியினருக்கு துணை போகும் காடையாம்பட்டி வட்டாட்சியர் மற்றும் டேனிஷ்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் காடையாம்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு  உறுப்பினர் எஸ்.கே.சேகர்,  ஓமலூர் தாலுகாச் செயலாளர் பி.அரியாக்கவுண்டர் மற்றும் பெத்தேல் காலனி பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

;