districts

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு

சேலம், ஜன.13- சேலம் மாவட்டம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவல கத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப் பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரி வித்துள்ளார்.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, சேலம் மாவட்டம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பாதுகாப்பு அலுவலர் மற்றும் சமூக பணியாளர் ஆகிய இரண்டு பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணி கள் முற்றிலும் தற்காலிகமான ஓராண்டு ஒப்பந்த அடிப்ப டையிலான பணிகளாகும்.

இது மத்திய, மாநில அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டம், ஆகையால், இதனை அடிப்படையாக கொண்டு எவ்விதத்திலும் அரசு பணி கோர இயலாது. எனவே, மேற்கண்ட பணிகளுக்கு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.  

தங்கள் விண்ணப்பங்கள் புகைப்படுத்துடன் வருகின்ற ஜன.29 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண்.415, நான்காவது தளம், மாவட்ட ஆட்சியரகம், சேலம் - 636001, தொலைப்பேசி எண்: 0427 - 2415966 என்ற முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மேற்கண்ட முகவரியில் நேரடியாகவோ அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

;