சேலம் ஜூலை 19- மோடி அரசுக்கு எதிராக எஸ்கே எம் விவசாயிகள் ஒருங்கிணைப் புக்குழு மீண்டும் போராட்டத்தை தொடங்கவுள்ள நிலையில், நாடா ளுமன்ற உறுப்பினர்களிடம் விவ சாய சங்கத் தலைவர்கள் ஆதரவு திரட்டினர்.
ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக சம்யுக்த கிசான் மோர்சா (எஸ்கேஎம்) அமைப்பினர், பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். தற் போது மீண்டும் போராட்டத்தை துவங்க உள்ளதாக அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வேளாண் பொருட்களுக்கு C2 +50 சதம் பார்முலா அடிப்படையில் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ண யம் செய்ய வேண்டும். விவசாயி கள் மற்றும் விவசாயத் தொழிலா ளர்கள் மீதான கடன் தள்ளுப டிக்கான விரிவான திட்டம் உரு வாக்க வேண்டும். மின்வாரியத்தை தனியார் மாயமாக்கக்கூடாது. வேளாண் இடுபொருட்கள் மற்றும் இயந்திரங்களுக்கான ஜி எஸ்டி வரி ரத்து செய்ய வேண் டும். விவசாயத்திற்கு தனி பட்ஜெட் அறிவிக்க வேண்டும் என ஒன்றிய அரசிற்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கை களை நாடாளுமன்றத்தில் விவா தித்து ஒன்றிய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியு றுத்தி சேலம் நாடாளுமன்ற உறுப்பி னர் டி.எம்.செல்வகணபதியை வெள்ளியன்று விவசாய சங்கங்க ளின் தலைவர்கள் நேரில் சந்தித்து, கோரிக்கை மனுவை அளித்தனர். இந்நிகழ்வில் எஸ்கேஎம் மாநில செயற்பாட்டுக்குழு உறுப்பினர் வி.சந்திரமோகன், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.ராமமூர்த்த ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் கள் என்.கே.செல்வராஜ், ஆர்.நடரா ஜன், சங்கரையா மற்றும் விவசாயி கள் சங்க தலைவர்கள் சரவணன், ஏழுமலை, பெரியதம்பி, சின்னப் பையன் ஆகியோர் உடனிருந்த னர்.
தருமபுரி
இதேபோன்று, தருமபுரி நாடா ளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணியை நேரில் சந்தித்து விவசாய சங்கத்தினர் கோரிக்கை மனுவை வழங்கினர். இதில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சோ.அர்ச்சுணன், அகில இந்திய விவசாயிகள் மகா சபா நிர்வாகி கோவிந்தராஜ், விவசாயிகள் விடுதலை முன்னணி ராமலிங்கம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் கே.என். மல்லையன் ஆகியோர் உடனிருந்த னர்.
நாமக்கல்
நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வ ரனை வெள்ளியன்று, ஐக்கிய விவசாயிகள் முன்னணி தலைவர் கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர். இதில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி யின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் படைவீடு பி.பெருமாள், கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.து.செல்வராஜ், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் செல்வ ராஜ், ஐக்கிய விவசாயிகள் முன் னணி அமைப்பின் ஒருங்கிணைப் புக்குழு உறுப்பினர்கள் மற்றும் பல் வேறு விவசாய சங்கங்களை சேர்ந் தவர்கள் கலந்து கொண்டனர்.