districts

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

சேலம், மார்ச் 1- 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வெள்ளியன்று துவங்கிய நிலையில், மாணாக்கர்கள் உற்சாகத்துடன் தேர்வை எழுதினர்.

தமிழ்நாடு முழுவதும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாண விகளுக்கான பொதுத்தேர்வு வெள்ளியன்று துவங் கியது. சேலம் கோட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் ரா. பிருந்தா தேவி ஆய்வு மேற்கொண்டார். சேலம் மாவட் டத்தில் மேல்நிலை இரண்டாமாண்டு பயிலும் 16026 மாணவிகளும், 18,831 மாணவர்கள் என 34857 பேர் தேர்வு  எழுதினர். தமிழ் தேர்விற்கு 552 பேர் தேர்வு எழுத வர வில்லை என பள்ளி கல்வித்துறை என தெரிவித்தனர். இதேபோல் தருமபுரி மாவட்டத்தில் 83 தேர்வு மையங்க ளில், 18,909 பேர் தேர்வெழுத இருந்தனர். இதில் 327  மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. 18,582 பேர் தேர்வெழுதினர். மேலும், முறைகேடுகளை தடுக்க,  பறக்கும் படையினர்கள் கண்காணிப்பு பணியில் ஈடு பட்டனர். தருமபுரி இலக்கியம்பட்டி அரசு பள்ளியில் தேர்வு எழுதும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு மேற்கொண்டார்.

பூக்கள் கொடுத்து வாழ்த்து
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஆவரங்காடு கிருஷ்ணவேணி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி யில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவிகள் சுமார் 282 பேர் பொதுத்தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு வருகை தந்தனர். அவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியை சரஸ் வதி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் பாலகிருஷ் ணன் மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் உள்ளிட்டோர் ரோஜா பூ கொடுத்து சிறப்பாக தேர்வு எழுத வேண்டுமென வாழ்த்துகளை தெரிவித்த னர்.