districts

img

தூய்மை இயக்கத்தில் வாலிபர் சங்க தோழர்கள்!

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நவம்பர் 3 அமைப்பு  தினத்தை கொண்டாடும் விதமாக, தமிழ்நாடு முழுவதும் நவ 1, 2, 3  தூய்மை இயக்கம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக கடலூர் ஒன்றியம், சி.என். பாளையம் கிராமத்தில் தூய்மைப் பணி காவலர்களுடன் இணைந்து  தூய்மை செய்யும் பணியில் வாலிபர் சங்கத்தினர் ஈடுபட்டனர். இந்த இயக்கத்தை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சி.என்.பாளையம்  அன்பு தொடங்கி வைத்தார். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சே.வினோத்குமார், ஒன்றியச் செயலாளர் எம்.கலைவாணன், ஒன்றியப் பொருளாளர் ஏ.சிவன்ராஜ், ஒன்றிய குழ உறுப்பினர்கள் வி.கோகுல், ஜி.விக்கி  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.