மின்னல் தாக்கி இளைஞர் பலி கள்ளக்குறிச்சி, டிச.26 - உளுந்தூர்பேட்டை அருகே இடி மின்னல் தாக்கி இளைஞர் உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த அமல்ராஜ் (28).இவர் தனது மாடுகளுக்கு தீவனம் சேகரிக்க விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அச்சமயத்தில் மழை பெய்ததால் மரத்தின் ஓரம் நின்றிருந்த ஆனந்தஅமல்ராஜ் மீது மின்னல் தாக்கியது. இதில் மயங்கி விழுந்தஅவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு எறையூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். அப்போது பரிசோதித்த மருத்துவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனை அடுத்து எலவனாசர்கோட்டை போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.