districts

img

மாதர், வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, ஜூன் 24- பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு இறந்த மாணவியின் பெற்றோருக்கு உரிய  பாதுகாப்பு வழங்கக்கோரி மாதர், வாலிபர்  சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி குருமாம்பேட் பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி பாலியல்  வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு இறந்த  விவகாரத்தில் குற்றவாளி அருண்குமா ருக்கு உரிய தண்டனை வழங்க நடவடிக்கை  எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவி யின் பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுக்  கப்பட்டிருப்பதால், அந்த குடும்பத்திற்கு காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க  வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை கள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. புதுச்சேரி மறைமலை அடிகள் சாலை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்  திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பிரதேச  தலைவர் சந்திரா தலைமை தாங்கினார். சங்கத்  தின் அகில இந்திய துணைத் தலைவர் சுதா  சுந்தர்ராமன், பிரதேச செயலாளர் சத்தியா,  பொருளாளர் இளவரசி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவர் ஆனந்த், செயலாளர் சரவணன், இந்திய மாண வர் சங்க பிரதேச தலைவர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் இதுகுறித்த மனுவை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழங்கினர்.

;