districts

img

யானை தாக்கி இளம்பெண் மரணம்

கிருஷ்ணகிரி,ஜன .17-  கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம்,  உத்தனப்பள்ளி சாலையில் அனுமந்த புரம் கிராமத்தைச் சேர்ந்த 27 வய தான இளம் பெண் மம்தா. இவர் கெல மங்கலம் பகுதியில் உள்ள ஒரு உணவ கத்தில் வேலை செய்து வருகிறார். வியாழக்  கிழமை காலை 6 மணிக்கு வேலைக்கு சென்றபோது அந்த சாலையில் வந்த இருசக்கர வாகன ஓட்டியிடம் கேட்டு பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். சினிகிரிப் பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது சாலையோரப் புதரில் மறைந்திருந்த ஒற்றை யானை சற்றும் எதிர்பாராத விதமாக குறுக்கே வந்துள்ளது. உடனடியாக இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அப்போது, சற்றும் எதிர்பாராத நிலையில், மம்தாவை தூக்கி வீசி தாக்கி உள்ளது.  இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரு சக்கர வாகன ஓட்டிகள் மட்டும் தப்பி ஓடி யுள்ளார். பிறகு, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் மம்தாவின் உடல் அருகில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த வனம் மற்றும் காவல்துறை அதி காரிகள் உடலை எடுக்க விடாமல் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, இந்த பகுதிக்கு அடிக்கடி கூட்டமாக படையெடுக்கும் யானைகள் அடர்ந்த வனப் பகுதிகள் விரட்டிட வனத்துறையும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று மம்தா குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும், அவரது குழந்தைகளின் படிப்பு செலவுகளை அரசே ஏற்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். யானை தாக்கி மரணம் அடைந்தால் ரூ. 5 லட்சம் வழங்கப்படுகிறது. அரசிட மிருந்து, அதிகமாக இழப்பீடு வாங்கி தரு வதாகவும், குழந்தைகள் படிப்பு செலவு களை ஏற்றுக் கொள்வதாகவும் உறுதிய ளித்தனர். இதையடுத்து, உடலை பெற்றுக் கொண்டனர்.